search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பொதுமக்கள் அஞ்சலி
    X

    மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பொதுமக்கள் அஞ்சலி

    கந்திகுப்பத்தில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் அம்பேத்கர்நகர் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் நேற்று ஒரு குரங்கு அங்குள்ள மரத்தில் அங்கும், இங்குமாக தாவி விளையாடி கொண்டிருந்தது. அப்போது அருகில் சென்ற மின்சார கம்பி மீது குரங்கு தாவியது.

    அந்த நேரம் குரங்கை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய அந்த குரங்கு பரிதாபமாக செத்தது. மேலும் அதன் உடல் மின்கம்பியில் தொங்கி கொண்டிருந்தது. இறந்த குரங்கை பார்த்து அங்கிருந்த மற்ற குரங்குகள் கத்தியது. இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தனர்.

    அதன்பின்னர் மின்கம்பியில் தொங்கி கொண்டிருந்த குரங்கு உடலை மீட்டு கீழே கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அந்த குரங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி குரங்கின் உடலுக்கு மஞ்சள், குங்குமம் தடவி, மாலை அணிவித்து, கற்பூரம் காண்பித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாடையில் குரங்கு உடலை வைத்து தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக சென்று அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரத்தில் பொதுமக்கள் அடக்கம் செய்தனர். 
    Next Story
    ×