search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளத் தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்- பெண்ணை வீடு புகுந்து தாக்கிய கும்பல் மீது வழக்கு
    X

    கள்ளத் தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்- பெண்ணை வீடு புகுந்து தாக்கிய கும்பல் மீது வழக்கு

    கள்ளத் தொடர்பை கண்டித்ததால் பெண்ணை வீடு புகுந்து தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    தேனி:

    ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள எரதிமக்கால்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சற்குரு இவருக்கு திருமணமாகி அம்மா பிள்ளை என்ற மனைவியும், விஜயபாண்டி (24), செல்வம் (22) ஆகிய மகன்களும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் அன்னமயில் (35), இவரது கணவர் இறந்து விட்டார்.

    இதனால் அவர் தனியாக வசித்து வந்தார். சற்குருவுக்கும் அன்னமயிலுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை அம்மாபிள்ளை மற்றும் அவரது மகன்கள் கண்டித்து வந்தனர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று அன்னமயில் மற்றும் அவரது உறவினர் லெட்சுமி (வயது 60) ஆகிய 2 பேரும் அம்மா பிள்ளை வீட்டுக்கு சென்று அவரை தரக்குறைவாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் 2 தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

    படுகாயமடைந்த அன்னமயில் க.விலக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயபாண்டி மற்றும் அவரது தம்பி செல்வத்தை கைது செய்தனர். மேலும் அம்மா பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் அன்னமயில் மற்றும் லெட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×