என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளத் தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்- பெண்ணை வீடு புகுந்து தாக்கிய கும்பல் மீது வழக்கு
Byமாலை மலர்18 Aug 2018 12:21 PM GMT (Updated: 18 Aug 2018 12:21 PM GMT)
கள்ளத் தொடர்பை கண்டித்ததால் பெண்ணை வீடு புகுந்து தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள எரதிமக்கால்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சற்குரு இவருக்கு திருமணமாகி அம்மா பிள்ளை என்ற மனைவியும், விஜயபாண்டி (24), செல்வம் (22) ஆகிய மகன்களும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் அன்னமயில் (35), இவரது கணவர் இறந்து விட்டார்.
இதனால் அவர் தனியாக வசித்து வந்தார். சற்குருவுக்கும் அன்னமயிலுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை அம்மாபிள்ளை மற்றும் அவரது மகன்கள் கண்டித்து வந்தனர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று அன்னமயில் மற்றும் அவரது உறவினர் லெட்சுமி (வயது 60) ஆகிய 2 பேரும் அம்மா பிள்ளை வீட்டுக்கு சென்று அவரை தரக்குறைவாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் 2 தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
படுகாயமடைந்த அன்னமயில் க.விலக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயபாண்டி மற்றும் அவரது தம்பி செல்வத்தை கைது செய்தனர். மேலும் அம்மா பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் அன்னமயில் மற்றும் லெட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள எரதிமக்கால்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சற்குரு இவருக்கு திருமணமாகி அம்மா பிள்ளை என்ற மனைவியும், விஜயபாண்டி (24), செல்வம் (22) ஆகிய மகன்களும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் அன்னமயில் (35), இவரது கணவர் இறந்து விட்டார்.
இதனால் அவர் தனியாக வசித்து வந்தார். சற்குருவுக்கும் அன்னமயிலுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை அம்மாபிள்ளை மற்றும் அவரது மகன்கள் கண்டித்து வந்தனர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று அன்னமயில் மற்றும் அவரது உறவினர் லெட்சுமி (வயது 60) ஆகிய 2 பேரும் அம்மா பிள்ளை வீட்டுக்கு சென்று அவரை தரக்குறைவாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் 2 தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
படுகாயமடைந்த அன்னமயில் க.விலக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயபாண்டி மற்றும் அவரது தம்பி செல்வத்தை கைது செய்தனர். மேலும் அம்மா பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் அன்னமயில் மற்றும் லெட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X