search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான்- சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்
    X

    சுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான்- சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்

    சுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சுதந்திர தின உரையில் பெருமையுடன் குறிப்பிட்டார். #IndependenceDayIndia
    சென்னை:

    நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்தினார். பின்னர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவித்து சுதந்திர தின உரையாற்றினார். தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு துறையின் சாதனைகளை பட்டியலிட்டு அவர் பேசியதாவது:-

    இந்திய சுதந்திர போராட்டத்திற்கான வேள்வி தமிழகத்தில்தான் தொடங்கியது. சுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம் தான். நாட்டுக்காக போராடிய வரலாற்று நாயகர்களை நாம் போற்றி புகழ வேண்டும்.

    ஜெயலலிதா வழியில், தமிழக அரசு ஏழைகளுக்கு பாடுபட்டு வருகிறது. தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது. பள்ளிக் கல்வித்துறையில் அரசு சாதனை படைத்து வருகிறது. நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 88 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #IndependenceDayIndia #EdappadiPalaniswami #FreedomStruggle
    Next Story
    ×