search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - நாளைமறுநாள் முதல் அமல்
    X

    தூத்துக்குடி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - நாளைமறுநாள் முதல் அமல்

    தூத்துக்குடி மாநகராட்சியில் நாளைமறுநாள்(புதன்கிழமை) முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வருவதாக, ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் நாளைமறுநாள்(புதன்கிழமை) முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வருவதாக, ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்புகள், உணவு பதார்த்தங்கள் பார்சலுக்கு பயன்படுத்தும் கவர்கள், உணவு மேசை விரிப்புகள், தட்டுகள், பிளாஸ்டிக் ஒட்டப்பட்ட தட்டுகள், கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், அனைத்து வித பிளாஸ்டிக் பைகள், கொடிகள், உறிஞ்சு குழல்கள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியை பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லாத நகரமாக அறிவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கல்வி நிறுவனங்கள் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 67 வணிக கடைகளில் “பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் உணவு மற்றும் இதர பொருள்களின் பிளாஸ்டிக் பொதி தாள்களை சேகரித்து கொடுக்கும் 10 எண்ணத்திற்கு ஒரு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பிளாஸ்டிக் பொதி தாள்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. மேலும் வணிக நிறுவனங்களின் சார்பாக பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தள்ளுபடி, சலுகைகள் மற்றும் இலவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு செயல்பாடுகள் அதிகப்படியான வரவேற்பை பெற்று உள்ளது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும் சுற்றுப்புறத்் தூய்மையை மேம்படுத்தும் வகையிலும் பொது மக்கள் தொடர்ந்து கடை வீதிகளுக்கு செல்லும் போது துணிப்பையை கொண்டு செல்லவும் இறைச்சி, உணவு பதார்த்தங்கள் வாங்கச் செல்லும் போது, பாத்திரங்களை கொண்டு செல்ல வேண்டும்.

    மேலும் வணிகர் சங்கங்கள் கையிருப்பில் உள்ள பேக்கிங் பொருட்களை முழுவதுமாக காலி செய்யும் வகையில் கால அவகாசம் நீடிப்பு செய்ய வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கையிருப்பில் உள்ள பேக்கிங் பொருட்களை காலி செய்ய 2 மாத கால அவகாசம் நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நாளைமறுநாள்(புதன்கிழமை) முதல் தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பேக்கிங் பொருட்களை தவிர இதர பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே, தடை உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் பட்சத்தில் மாநகராட்சி சட்ட விதிகளின்படி தக்க மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×