என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தவளக்குப்பம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்த இளம்பெண் மாயம்
Byமாலை மலர்11 Aug 2018 10:03 AM GMT (Updated: 11 Aug 2018 10:03 AM GMT)
தவளக்குப்பம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்த இளம்பெண் மாயமானார்.
பாகூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் வனத்தையன். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் கலைச்செல்வி. (வயது 24).
இவர் புதுவை தவளக்குப்பம் அருகே கொருக்குமேட்டில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் கடந்த சில மாதங்களாக தங்கி உதவியாளராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி விடுதியில் இருந்து திடீரென கலைச் செல்வி மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து கேட்டபோது, அங்கும் கலைச்செல்வி செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து கலைச் செல்வி மாயமானது குறித்து விடுதி பொறுப்பாளர் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கலைச்செல்வி காதல் வலையில் விழுந்து காதலனோடு சென்றாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X