என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுபவம் இல்லாதவர்கள் பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை- அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
Byமாலை மலர்4 Aug 2018 7:58 AM GMT (Updated: 4 Aug 2018 7:58 AM GMT)
அனுபவம் இல்லாதவர்கள் பிரசவம் பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.#TNMinister #Vijayabaskar
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா இன்று நடந்தது. இதனை திறந்து வைத்த மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது, சமூக வலை தளங்களில் வெளியாகும் வீடியோவை பார்த்து பிரசவம் பார்ப்பது போன்றவை நடந்து வருகிறது. இது கண்டிக்கத்தக்க செயலாகும். மருத்துவத்துறையில் தமிழக சுகாதாரத்துறை சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.
குறிப்பாக அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் இறப்பு சதவிகிதமும் குறைந்துள்ளது. இதனால் வசதி படைத்தவர்கள் கூட அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருகின்றனர்.
இது போன்ற நிலையில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது நடைமுறைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே பிரசவத்தில் ஈடுபட வேண்டும்.
இதனை மீறி வீடுகளில் பிரசவம் பார்ப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு யோகா, ஆயுஷ் போன்றவற்றை ஊக்குவித்து வருகிறது. சுகமான பிரசவம், தாய் சேய் நல பாதுகாப்பில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar
திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா இன்று நடந்தது. இதனை திறந்து வைத்த மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது, சமூக வலை தளங்களில் வெளியாகும் வீடியோவை பார்த்து பிரசவம் பார்ப்பது போன்றவை நடந்து வருகிறது. இது கண்டிக்கத்தக்க செயலாகும். மருத்துவத்துறையில் தமிழக சுகாதாரத்துறை சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.
குறிப்பாக அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் இறப்பு சதவிகிதமும் குறைந்துள்ளது. இதனால் வசதி படைத்தவர்கள் கூட அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருகின்றனர்.
இது போன்ற நிலையில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது நடைமுறைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே பிரசவத்தில் ஈடுபட வேண்டும்.
இதனை மீறி வீடுகளில் பிரசவம் பார்ப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு யோகா, ஆயுஷ் போன்றவற்றை ஊக்குவித்து வருகிறது. சுகமான பிரசவம், தாய் சேய் நல பாதுகாப்பில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X