search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் ரெயில் மோதி ஆசிரியர் பலி
    X

    தஞ்சையில் ரெயில் மோதி ஆசிரியர் பலி

    தஞ்சையில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆசிரியர் மீது பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். #TrainAccident
    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த திருவையாறு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ராஜமூர்த்தி(வயது54). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தினமும் காலையில் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு மோட்டார் சைக்கிளில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல நேற்றுமுன்தினம் காலையில் வழக்கம்போல் கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ராஜமூர்த்தி புறப்பட்டார்.

    தஞ்சை-திட்டை இடையே கும்பகோணம் பைபாஸ் சாலையில் வந்தபோது, திடீரென சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக ரெயில்வே தண்டவாளத்தை ராஜமூர்த்தி கடந்து சென்றார். அப்போது அவர் மீது அந்த வழியாக வந்த பயணிகள் ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடனே அந்த பகுதியில் நின்ற சிலர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலையில் ராஜமூர்த்தி பலியானார். இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #TrainAccident 
    Next Story
    ×