search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய என்ஜினீயரிங் மாணவர்
    X

    கன்னியாகுமரி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய என்ஜினீயரிங் மாணவர்

    10-ம் வகுப்பு மாணவியை கடத்திய என்ஜினீயரிங் மாணவர் மீது தாய் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி இலங்காமணிபுரத்தைச் சேர்ந்த பெண், கன்னியாகுரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்கள்.

    இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் தாயின் பராமரிப்பிலும், மகன் தந்தை பராமரிப்பிலும் இருந்து வருகிறார்கள். மகள் நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் என பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    மாணவி மாயமான அதே நாளில் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவரும் மாயமாகி உள்ளார். இதனால் அவர் தான் மாணவியை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என மாணவியின் தாயார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 21-ந் தேதிபள்ளிக்கு சென்ற எனது மகள் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி பள்ளிக் கூடத்துக்கு சென்றேன். ஆனால் அவள் பள்ளிக்கு வரவில்லை என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். உறவினர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனது மகள் மாயமான சமயத்தில் எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் என்ஜினீயரிங் மாணவர் ஒருவரும் மாயமாகி உள்ளார். அந்த மாணவர் எனது மகளுடன் பழகி வந்துள்ளார். அவர் தான் எனது மகளை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன். எனவே அவரிடம் இருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவி மற்றும் என்ஜினீயரிங் மாணவரை தேடி வருகிறார்கள்.

    என்ஜினீயரிங் மாணவருக்கு 16 வயது ஆகிறது. மாயமான 2 பேரும் மைனர் என்பதால் அவர்கள் 2 பேரையும் மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×