search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- பாலிடெக்னிக் மாணவர் கைது
    X

    திருமங்கலம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- பாலிடெக்னிக் மாணவர் கைது

    காதலிப்பதாக கூறி 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பாலிடெக்னிக் மாணவர் கைது செய்யப்பட்டார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கட்றாம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    அதில் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ஆனந்த் (வயது 20) காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், தற்போது திருமணம் செய்ய வலியுறுத்தியபோது ஆனந்த்தும், அவரது குடும்பத்தினரும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஆனந்த், அவரது தாய் காமாட்சி, உறவினர்கள் சுந்தரம், பிரியா, அர்ஜூன், அலெக்ஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் ஆனந்த் கைது செய்யப்பட்டார். இவர் திண்டுக்கல்லில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×