search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    சென்னை-கூடூர் பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் இன்று மற்றும் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை-கூடூர் பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை(திங்கட்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * மூர்மார்க்கெட்-ஆவடி இடையே மதியம் 2.05 மணிக்கும், ஆவடி-மூர்மார்க்கெட் இடையே மதியம் 2.50 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை-விழுப்புரம் பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையே காலை 11.30 மணிக்கும், விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையே மதியம் 1.55 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை எழும்பூர்-புதுச்சேரி பயணிகள் ரெயில்(வண்டி எண்: 56037), விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் 3.30 மணி நேரம் செங்கல்பட்டில் நிறுத்திவைக்கப்படும்.

    மேலும் புதுச்சேரி-எழும்பூர் பயணிகள் சிறப்பு ரெயில்(56038) மாலை 5.50 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும். புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரெயில்(56042), புதுச்சேரி-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127), 2 மணி நேரம் ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்படும். எழும்பூர்-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ்(16795), 2 மணி நேரம் செங்கல்பட்டில் நிறுத்திவைக்கப்படும். திருப்பதி-புதுச்சேரி பயணிகள் ரெயில்(56041), 1.50 மணி நேரம் செங்கல்பட்டில் நிறுத்தி வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×