search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்பிடி தடைகாலம் முடிந்ததையொட்டி மீன்கள் வரத்து அதிகரிப்பு
    X

    மீன்பிடி தடைகாலம் முடிந்ததையொட்டி மீன்கள் வரத்து அதிகரிப்பு

    மீன்பிடி தடை காலம் முடிந்ததையொட்டி மீன்களை வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் இன்று காலை காசிமேடு துறைமுகத்தில் குவிந்தனர்.
    ராயபுரம்:

    மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கியது. கடந்த 14-ந்தேதி வரை 61 நாட்கள் அமலில் இருந்தது. இதனால் மீனவர்கள் விசை படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. பைபர் படகுகளில் கடலில் சிறிது தூரம் சென்றே மீன்பிடித்து வந்தனர். இதனால் மீன்வரத்து குறைந்து விலை அதிகரித்தது.

    மீன்பிடி தடை காலம் முடிந்ததையொட்டி கடந்த 14-ந்தேதி இரவு மீனவர்கள் விசை படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் அவர்கள் படகிலேயே தங்கி மீன்பிடித்தனர். சில மீனவர்கள் ஓரிரு நாளில் கரை திரும்பினாலும் குறைந்த அளவே மீன்கள் வரத்து இருந்தது.

    ஒரு வாரத்துக்கு பிறகு இன்று மீனவர்கள் கரை திரும்பினார்கள். அவர்கள் ஏராளமான மீன்களை பிடித்து வந்தனர். மீன்களை வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் இன்று காலை காசிமேடு துறைமுகத்தில் குவிந்தனர். மீன்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். 15 கிலோ எடை கொண்ட திருக்கை மீன் ரூ.5 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதேபோல் வஞ்சிரம், இறால், வவ்வால், சீலா போன்ற ஏராளமான மீன்களை வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.
    Next Story
    ×