search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புலியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டு.
    X
    புலியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டு.

    குன்னூரில் ஊருக்குள் உலா வந்த புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது

    குன்னூரில் ஊருக்குள் உலா வந்த புலியை பிடிக்க வன துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வன பகுதிகளாகும். இங்கு காட்டெருமை, மான், சிறுத்தை, கரடி, காட்டுபன்றி, யானை, புலி போன்ற மிருகங்கள் வசித்து வருகின்றன.

    இவைகள் அடிக்கடி குன்னூர் நகருக்குள் வந்து பொது மக்களை அவ்வபோது தாக்கி செல்கின்றன. தற்போது குன்னூர் நகர பகுதியான ஆரஞ்ச் குரோவ், ஹவுசிங் யூனிட், வண்ணாரபேட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் வாழும் அதிக குடியிருப்புகள் உள்ளன. மேலும் தனியார் பள்ளியும் மகளிர்கான தனியார் பெண்கள் விடுதியும் உள்ளது.

    இந்த பகுதியில் இரவு நேரங்களில் தினந்தோறும் புலி ஒன்று உலா வருகிறது. அந்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் சி.சி.டி கண்காணிப்பு கேமிராவில் புலி நடமாடுவது பதிவாகி இருந்தன. மேலும் அங்குள்ள ஒரு நாயை அடித்து கொன்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதை பற்றிபல முறை வனதுறைக்கு தகவல் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆரஞ்சு குரோவ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பங்களாவில் இரவு நாய் குரைத்து கொண்டு இருப்பதை என்னவென்று இரவு நேர காவலாளி டார்ச் லைட் வெளிசத்தில் பார்துள்ளார். நாயின் கூண்டின் முன்பு பெரிய புலி ஒன்று நாயை பார்த்துகொண்டே படுத்து இருப்பதை பார்த்த

    அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் வனதுறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. வன துறையினர் அந்த பகுதியில் புலியை பிடிக்க கூண்டில் கோழியை வைத்துள்ளனர்.

    Next Story
    ×