search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை ஆசிரியரை மிரட்டும் ஆசிரியர்கள்- வேலூர் கலெக்டரிடம் புகார்
    X

    தலைமை ஆசிரியரை மிரட்டும் ஆசிரியர்கள்- வேலூர் கலெக்டரிடம் புகார்

    வேலூரில் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டி வரும் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று குறை தீர்வு கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி சேர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் ராமன் என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டர் ராமனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சேர்க்காடு அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரை, உதவி தலைமை ஆசிரியர் மிரட்டி வருகிறார். உதவி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் ஆசிரியர்கள் 7 பேர் உள்ளனர்.

    இவர்கள், அனைவரும் தலைமை ஆசிரியரின் சொல்லுக்கு கட்டுப்படுவதில்லை. மாறாக எதிர் மறையான செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இதனால், மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

    எனவே, உதவி தலைமை ஆசிரியர் தலைமையிலான 7 ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
    Next Story
    ×