search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே எந்திரத்தில் சிக்கிய தொழிலாளி தலை துண்டித்து பலி
    X

    திருமங்கலம் அருகே எந்திரத்தில் சிக்கிய தொழிலாளி தலை துண்டித்து பலி

    செங்கல் சூளையில் தலை துண்டித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விரிசங்குளம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). இவர் அதே பகுதியில் நாராயணன் என்பவர் நடத்தி வரும் சிமெண்டு செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். பாலமுருகனுக்கு வள்ளி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    வழக்கம் போல் பாலமுருகன் வேலைக்கு சென்றார். அவர் தொழிற்சாலையில் உள்ள செங்கல் தயாரிக்கும் அச்சு எடுக்கும் எந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக “ஏர் கம்ப்ரசர்” லீக் ஆகி எந்திரம் செயல் பட தொடங்கியது. பால முருகனின் தலை எந்திரத்தில் சிக்கியது. இதில் அவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×