என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போலீஸ்காரரின் தலையில் கத்தியால் வெட்டிய கொள்ளையன் கைது
Byமாலை மலர்18 May 2018 8:00 AM GMT (Updated: 18 May 2018 8:00 AM GMT)
சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் போலீஸ்காரரின் தலையில் கத்தியால் வெட்டிய கொள்ளையனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 செல்போனை பறிமுதல் செய்தனர்.
சென்னை:
சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் பயணிகளிடம் செல்போன்களை பறித்துக் கொண்டு 4 இளைஞர்கள் தப்பி ஓடினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் காரர்கள் யோகேஸ்குமார், ரத்தன்லால் இருவரும் கொள்ளையர்களை விரட்டினர்.
ஆனால் 3 கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஒருவன் மட்டும் போலீசில் சிக்கினான். போலீசார் மடக்கி பிடித்தும் பிடியில் இருந்து தப்பிச்செல்ல அவன் முயற்சித்தான். இதனால் போலீஸ்காரர் யோகேஷ் குமாருக்கும் கொள்ளையனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் தான் மறைத்து வைத்திருந்த பெரிய பட்டா கத்தியால் கொள்ளையன் திடீரென தாக்குதலில் ஈடுபட்டான். போலீஸ்காரர் யோகேஷ் குமாரின் தலையில் வெட்டு விழுந்தது.
ரத்தம் கொட்டியது. அதற்குள் மற்ற போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு யோகேஷ் குமாருடன் சேர்ந்து கொள்ளையன் தப்பி செல்ல முடியாத வகையில் பிடித்து கைது செய்தனர்.
காயம் அடைந்த யோகேஷ் குமார் சென்னை ராஜிவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட கொள்ளையன் பெயர் விஜய் (21).
திருவல்லிக்கேணி விக்டோரியா ஆஸ்பத்திரி அருகில் வசித்து வந்த இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவனிடமிருந்த 4 செல்போன்களும் கைப்பற்றப்பட்டன. பெரிய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தேடிவருகிறார்கள்.#tamilnews
சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் பயணிகளிடம் செல்போன்களை பறித்துக் கொண்டு 4 இளைஞர்கள் தப்பி ஓடினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் காரர்கள் யோகேஸ்குமார், ரத்தன்லால் இருவரும் கொள்ளையர்களை விரட்டினர்.
ஆனால் 3 கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஒருவன் மட்டும் போலீசில் சிக்கினான். போலீசார் மடக்கி பிடித்தும் பிடியில் இருந்து தப்பிச்செல்ல அவன் முயற்சித்தான். இதனால் போலீஸ்காரர் யோகேஷ் குமாருக்கும் கொள்ளையனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் தான் மறைத்து வைத்திருந்த பெரிய பட்டா கத்தியால் கொள்ளையன் திடீரென தாக்குதலில் ஈடுபட்டான். போலீஸ்காரர் யோகேஷ் குமாரின் தலையில் வெட்டு விழுந்தது.
ரத்தம் கொட்டியது. அதற்குள் மற்ற போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு யோகேஷ் குமாருடன் சேர்ந்து கொள்ளையன் தப்பி செல்ல முடியாத வகையில் பிடித்து கைது செய்தனர்.
காயம் அடைந்த யோகேஷ் குமார் சென்னை ராஜிவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட கொள்ளையன் பெயர் விஜய் (21).
திருவல்லிக்கேணி விக்டோரியா ஆஸ்பத்திரி அருகில் வசித்து வந்த இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவனிடமிருந்த 4 செல்போன்களும் கைப்பற்றப்பட்டன. பெரிய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தேடிவருகிறார்கள்.#tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X