search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது - ஜவாஹிருல்லா
    X

    கர்நாடக தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது - ஜவாஹிருல்லா

    கர்நாடக தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 91 நாளாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பொதுமக்களின் போராட்டத்தை கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வரும் 22-ந்தேதி தூத்துக்குடியில் அனைத்து மக்களும் இணைந்து முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவிப்பதோடு நாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்வோம்.

    கூடங்குளத்தில் அணு உலை கழிவுகள் வளாகத்திலேயே கொட்டப்படுவதாக தெரிவித்துள்ளனர். இது தென்மாவட்டங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து மக்களை பாதுகாக்க அணு உலையில் மின்சார உற்பத்தியை நிறுத்த வேண்டும். கர்நாடக தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழகத்திற்கு நன்மை கிடைக்காது என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×