என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியகுளம் அருகே விவசாயியை தாக்கிய தந்தை-மகன்
தேனி:
பெரியகுளத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 53). இவருக்கு பெரியகுளம் அருகே உள்ள வேளாண்குளம் பகுதியில் தோட்டம் உள்ளது. இங்கு தற்போது வாழை கன்றுகளை நடவு செய்துள்ளார்.
சம்பவத்தன்று தெய்வேந்திரன் தோட்டத்துக்கு சென்ற போது 3 பேர் தோட்டத்தில் இருந்த வாழைக்கன்றுகளை சேதப்படுத்திக் கொண்டு இருந்தனர். இதை கண்ட தெய்வேந்திரன் அவர்களை தட்டிக் கேட்டார்.
இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் தெய்வேந்திரனை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த தெய்வேந்திரன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பெரியகுளம் போலீசார் விசாரணை நடத்தி தெய்வேந்திரனை தாக்கியது வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், அவரது மகன் விவேக் மற்றும் ஒருவர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்