என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி விவகாரம் - திருச்சியில் வருகிற 8-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரதம்
Byமாலை மலர்5 May 2018 10:15 AM GMT (Updated: 5 May 2018 10:15 AM GMT)
காவிரி விவகாரம் தொடர்பாக திருச்சியில் வருகிற 8-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
திருச்சி:
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் குருசாமி, தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன மாநில தலைவர் விசுவநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை இறுதிப்பட செயல்படுத்த இயலாத ஒரு சூழ்நிலையை இன்றைக்கு அறிவித்துள்ள முடிவின்படி வெளிப்படையாக தெரிகிறது. இந் திய அரசியலமைப்பு சட்டத்தில் பாராளுமன்றம் பெரிதா? சட்டமன்றம் பெரிதா? இல்லை நீதித்துறை பெரிதா? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறபோது, இரண்டு அங்கங்களையும் நீதித்துறைதான் சரிப்படுத்த வேண்டும் என சொல்லி இருக்கிறது.
ஆனால், நீதித்துறையே பாராளுமன்றத்திற்கும், நிர்வாகத்துறைக்கும் பின் போகின்றது என்பதை தலைமை நீதிபதியின் தலைமையில் இருக்கிற சுப்ரீம் கோர்ட்டு நிரூபித்து காட்டி உள்ளது. கீழமை பாசன உரிமை என்பது சர்வதேச சட்டத்தின்படியும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படியும் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள நதிநீர் பங்கீட்டு சட்டப்படியும் நிரூபிக்கப்பட்ட ஒன்று.
காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும், கர்நாடக அரசும் பறிப்பதை இந்த தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு வன்மையாக கண்டிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் போக்கை மக்களுக்கும் எடுத்து சொல்லும் வகையில் வருகிற 8-ந்தேதி திருச்சியில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மக்கள் அமைப்பு சார்ந்த ஒரு மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் குருசாமி, தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன மாநில தலைவர் விசுவநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை இறுதிப்பட செயல்படுத்த இயலாத ஒரு சூழ்நிலையை இன்றைக்கு அறிவித்துள்ள முடிவின்படி வெளிப்படையாக தெரிகிறது. இந் திய அரசியலமைப்பு சட்டத்தில் பாராளுமன்றம் பெரிதா? சட்டமன்றம் பெரிதா? இல்லை நீதித்துறை பெரிதா? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறபோது, இரண்டு அங்கங்களையும் நீதித்துறைதான் சரிப்படுத்த வேண்டும் என சொல்லி இருக்கிறது.
ஆனால், நீதித்துறையே பாராளுமன்றத்திற்கும், நிர்வாகத்துறைக்கும் பின் போகின்றது என்பதை தலைமை நீதிபதியின் தலைமையில் இருக்கிற சுப்ரீம் கோர்ட்டு நிரூபித்து காட்டி உள்ளது. கீழமை பாசன உரிமை என்பது சர்வதேச சட்டத்தின்படியும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படியும் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள நதிநீர் பங்கீட்டு சட்டப்படியும் நிரூபிக்கப்பட்ட ஒன்று.
காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும், கர்நாடக அரசும் பறிப்பதை இந்த தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு வன்மையாக கண்டிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் போக்கை மக்களுக்கும் எடுத்து சொல்லும் வகையில் வருகிற 8-ந்தேதி திருச்சியில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மக்கள் அமைப்பு சார்ந்த ஒரு மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X