search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூலூர் அருகே தொழிலாளி தற்கொலை
    X

    சூலூர் அருகே தொழிலாளி தற்கொலை

    சூலூர் அருகே திருமணமான 7 மாதத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள காமநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 31). கூலித் தொழிலாளி. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் வேதநாயகி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. வேலைக்கு செல்லும் ராஜன் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனை அவரது மனைவி கண்டித்தார். சம்பவத்தன்றும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ராஜன் மனைவியிடம் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார்.

    பின்னர் சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ராஜனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×