என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக பல்கலைக்கழக பேராசிரியர் மீது மனைவி புகார்
Byமாலை மலர்25 July 2017 4:07 PM GMT (Updated: 25 July 2017 4:07 PM GMT)
ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக மனைவி கொடுத்த புகாரின்பேரில் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள தாதன்குளத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் சுரேஷ்குமார். இவருக்கும் பேரையூர் எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்த விஷ்ணு பிரியா (வயது25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சுரேஷ்குமார் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
திருமணத்தின்போது 40 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்ததாகவும், தற்போது கூடுதலாக ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு சுரேஷ் குமார் மற்றும் அவரது உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் விஷ்ணுபிரியா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் மீனா புகாரின்பேரில் பேராசிரி யர் சுரேஷ்குமார், உறவினர்கள் ராஜகோபால், ஜோதி குரு, முருகன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள தாதன்குளத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் சுரேஷ்குமார். இவருக்கும் பேரையூர் எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்த விஷ்ணு பிரியா (வயது25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சுரேஷ்குமார் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
திருமணத்தின்போது 40 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்ததாகவும், தற்போது கூடுதலாக ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு சுரேஷ் குமார் மற்றும் அவரது உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் விஷ்ணுபிரியா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் மீனா புகாரின்பேரில் பேராசிரி யர் சுரேஷ்குமார், உறவினர்கள் ராஜகோபால், ஜோதி குரு, முருகன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X