என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே காவலாளியை கட்டி போட்டு டாஸ்மாக் கடையில் துணிகர கொள்ளை
Byமாலை மலர்21 July 2017 10:31 AM GMT (Updated: 21 July 2017 10:31 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் இருந்து வெண்டிநாயக்கன்பட்டி செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.
நேற்று வியாபாரம் முடிந்து பணியாளர்கள் கடையை பூட்டி சென்றனர். காவலுக்கு காவலாளி ஒருவர் இருப்பது வழக்கம்.
நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம கும்பல் ஒன்று டாஸ்மாக் கடை அருகே வந்தது. காவலாளி அவர்களை விசாரித்தபோது திடீரென கத்தியை காட்டி மிரட்டினர். பின்பு காவலாளியை கட்டிபோட்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் அங்கிருந்த 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை அள்ளி சென்றனர்.
காட்டு பகுதி என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. இதனால் காவலாளி இரவு முழுவதும் கட்டப்பட்ட நிலையிலேயே கிடந்தார். பின்பு கட்டை அவிழ்த்து விட்டு ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று காலை டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 4 பேரை பிடித்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் இருந்து வெண்டிநாயக்கன்பட்டி செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.
நேற்று வியாபாரம் முடிந்து பணியாளர்கள் கடையை பூட்டி சென்றனர். காவலுக்கு காவலாளி ஒருவர் இருப்பது வழக்கம்.
நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம கும்பல் ஒன்று டாஸ்மாக் கடை அருகே வந்தது. காவலாளி அவர்களை விசாரித்தபோது திடீரென கத்தியை காட்டி மிரட்டினர். பின்பு காவலாளியை கட்டிபோட்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் அங்கிருந்த 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை அள்ளி சென்றனர்.
காட்டு பகுதி என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. இதனால் காவலாளி இரவு முழுவதும் கட்டப்பட்ட நிலையிலேயே கிடந்தார். பின்பு கட்டை அவிழ்த்து விட்டு ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று காலை டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 4 பேரை பிடித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X