search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கச்சிமடம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்
    X

    தங்கச்சிமடம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்

    தங்கச்சிமடம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    தங்கச்சிமடம் அருகே உள்ள மெய்யம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ். மீனவரான இவருக்கு பானுபிரியா (வயது 24) என்ற மனைவியும், 1 வயதில் மெகஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளது.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று தகராறு ஏற்பட விரக்தியடைந்த பானுபிரியா தனது குழந்தையுடன் மாயமானார்.

    இதனால் பதட்டமடைந்த காளிதாஸ் தனது மனைவி மற்றும் மகளை பல்வேறு இடங்களில் தேடினார். பலன் இல்லை.

    இது குறித்த புகாரின் பேரில் தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றார்.

    Next Story
    ×