search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலத்தில் அரசு பஸ் மோதி விவசாயி மரணம்
    X

    திருமங்கலத்தில் அரசு பஸ் மோதி விவசாயி மரணம்

    திருமங்கலத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூரைச் சேர்ந்தவர் சிவபாண்டி (வயது 44) விவசாயி. நேற்று மாலை இவர் திருமங்கலம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    இந்திரா காலனி ஊரணி பகுதியில் வந்தபோது அய்யனார்குளத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இந்த விபத்தில் சிவபாண்டி தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் கிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×