என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம் அருகே இடி தாக்கி விவசாயி பலி
பேரையூர்:
திருமங்கலம் அருகே பேரையூரை அடுத்துள்ள பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது40), விவசாயி. இவரது மனைவி மாரீஸ்வரி. நேற்று வேல்முருகன் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடியுடன் பலத்த மழை கொட்டியது.
மழையை பொருட்படுத்தாமல் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இடி தாக்கியதில் வேல்முருகன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் அழைத்து வந்த கன்றுகுட்டி மீதும் இடி தாக்கியதில் அதுவும் பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி மருது பாண்டியர் நகரைச் சேர்ந்தவர் விஜயகண்ணன் (வயது 30). கட்டிடத்திற்கு கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு முத்துபேச்சி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நேற்று விஜயகண்ணன் அதே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் மோட்டார் போடுவதற்காக சுவிட்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி விஜயகண்ணன் இறந்தார்.
தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாலுகா போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்