என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை மாவட்டத்தில் மணல் கடத்திய 3 பேர் கைது
Byமாலை மலர்28 Jan 2017 1:38 PM GMT (Updated: 28 Jan 2017 1:38 PM GMT)
நெல்லை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மணல் கடத்துபவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பணகுடி போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது பணகுடி ஆற்றுப்பகுதியில் இருந்து மினிலாரியில் 1 யூனிட் மணலை கடத்தியது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் விரைந்து சென்று மணல் கடத்திய பணகுடியைச் சேர்ந்த ஜெனல்ராஜ் (வயது 31) என்பவரை கைது செய்தனர். தப்பிஓடிய குமரன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபோல கரிவலம்வந்தநல்லூர் ஆற்றுப்பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தியதை அறிந்த போலீசார் விரைந்து சென்று செந்தட்டியாபுரத்தைச் சேர்ந்த மாசாணம் (36), பாலமுருகன் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மாரியப்பன் என்பவரை தேடி வருகிறார்கள்.
நான்குநேரியில் உள்ள பெரியகுளத்தில் மினிலாரியில் மணல் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரி வைகுண்டராஜ் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று மினிலாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வேப்பங்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (31) என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மணல் கடத்துபவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பணகுடி போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது பணகுடி ஆற்றுப்பகுதியில் இருந்து மினிலாரியில் 1 யூனிட் மணலை கடத்தியது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் விரைந்து சென்று மணல் கடத்திய பணகுடியைச் சேர்ந்த ஜெனல்ராஜ் (வயது 31) என்பவரை கைது செய்தனர். தப்பிஓடிய குமரன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபோல கரிவலம்வந்தநல்லூர் ஆற்றுப்பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தியதை அறிந்த போலீசார் விரைந்து சென்று செந்தட்டியாபுரத்தைச் சேர்ந்த மாசாணம் (36), பாலமுருகன் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மாரியப்பன் என்பவரை தேடி வருகிறார்கள்.
நான்குநேரியில் உள்ள பெரியகுளத்தில் மினிலாரியில் மணல் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரி வைகுண்டராஜ் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று மினிலாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வேப்பங்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (31) என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X