search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது
    X

    மார்த்தாண்டம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

    மார்த்தாண்டம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி தடை செய்யப்பட்ட 4 பெட்டி புகையிலையை பறிமுதல் செய்தனர்.
    குழித்துறை:

    மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் மற்றும் போலீசார் நேற்று காந்தி மைதானம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக டெம்போ ஒன்று வேகமாக வந்தது.

    சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட் புகையிலை 4 பெட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து புகையிலையை பறிமுதல் செய்து புகையிலையை கொண்டு வந்த தேங்காய்பட்டிணத்தை சேர்ந்த ஆனந்தசத்யா (வயது 32), நஜமுதின் (30) ஆகியோரை கைது செய்தனர்.
    Next Story
    ×