என் மலர்
செய்திகள்

திருக்காட்டுப்பள்ளி அருகே தீக்குளித்த பெண் பலி
திருக்காட்டுப்பள்ளி அருகே தீக்குளித்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள பிரமன்பேட்டை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரிதா(வயது29) விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு தொடர்ந்து தலைவலி இருந்து வந்துள்ளது. பல மருந்துகள் சாப்பிட்டும் குணமாகாத நிலையில் சரிதா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
உடலில் பலத்த தீக்காயங்களுடன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சரிதா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து திருக்காட்டுப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story