என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருகே தண்ணீர் தேடிவந்த 9 மான் கிணற்றுக்குள் விழுந்தன
Byமாலை மலர்26 Jan 2017 9:55 AM GMT (Updated: 26 Jan 2017 9:55 AM GMT)
திருவண்ணாமலை அருகே துரிஞ்சாபுரம் அருகே தண்ணீர் தேடி வந்த 9 புள்ளி மான்கள் கிணற்றில் விழுந்தன. இதில் 5 மான்கள் இறந்தன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் கவுத்திமலை காப்புக்காடுகளில் புள்ளிமான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. காட்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் வன விலங்குகள் கிராமபுற குடியிருப்பு பகுதிகளுக்கு வரத் தொடங்கி விட்டன.
நேற்று இரவு 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் கூட்டமாக பழைய மண்ணை விவசாய நில பகுதிக்கு நேற்று இரவு வந்தன. சம்பத் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்குள் 9 மான்கள் தவறி விழுந்தன.
இன்று காலை கிணற்றுக்குள் மான்கள் தத்தளிப்பதை கண்ட பொதுமக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மான்களை மீட்டனர். தண்ணீரில் மூழ்கிய 4 மான்கள் இறந்த நிலையில் மீட்கபட்டன. ஒரு மானுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற 4 மான்கள் காட்டில் விடப்பட்டன.
இதற்கிடையே மான் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற மேலும் ஒரு மானை தெரு நாய்கள் கடித்து குதறின. இதில் மான் பரிதாபமாக இறந்தது. பலியான 5 மான்கள் எரித்து அழிக்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் கவுத்திமலை காப்புக்காடுகளில் புள்ளிமான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. காட்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் வன விலங்குகள் கிராமபுற குடியிருப்பு பகுதிகளுக்கு வரத் தொடங்கி விட்டன.
நேற்று இரவு 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் கூட்டமாக பழைய மண்ணை விவசாய நில பகுதிக்கு நேற்று இரவு வந்தன. சம்பத் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்குள் 9 மான்கள் தவறி விழுந்தன.
இன்று காலை கிணற்றுக்குள் மான்கள் தத்தளிப்பதை கண்ட பொதுமக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மான்களை மீட்டனர். தண்ணீரில் மூழ்கிய 4 மான்கள் இறந்த நிலையில் மீட்கபட்டன. ஒரு மானுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற 4 மான்கள் காட்டில் விடப்பட்டன.
இதற்கிடையே மான் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற மேலும் ஒரு மானை தெரு நாய்கள் கடித்து குதறின. இதில் மான் பரிதாபமாக இறந்தது. பலியான 5 மான்கள் எரித்து அழிக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X