என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய தேர்வு முறைக்கு எதிர்ப்பு: அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம்
Byமாலை மலர்6 Jan 2017 9:22 AM GMT (Updated: 6 Jan 2017 9:22 AM GMT)
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், மருத்துவ மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் புதிய தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தர்ணா போராட்டம் நடந்தது.
ராயபுரம்:
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், மருத்துவ மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தர்ணா போராட்டம் இன்று நடந்தது.
அரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த போராட்டத்தில் பயிற்சி டாக்டர்கள், மாணவர்கள், அரசு டாக்டர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
எம்.பி.பி.எஸ் படித்து முடித்த மாணவர்கள் ‘நெஸ்ட்’ என்ற ‘எக்ஸ்சிட்’ தேர்வை எழுத வேண்டும் என்று புதிய தேர்வு முறையை மத்திய அரசு கொண்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டம் குறித்துஅரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எக்ஸ்சிட் புதிய தேர்வு முறை தேவையில்லை. எம்.பி.பி.எஸ் படிக்கும் போதே மாணவர்கள் தேவையான மருத்துவ பயிற்சியும், கல்வியும் அறிந்து இருக்கிறார்கள். அதன் பிறகு ஒரு தேர்வு முறை தேவையற்றது. அதனை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் பெரிய அளவில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், மருத்துவ மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தர்ணா போராட்டம் இன்று நடந்தது.
அரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த போராட்டத்தில் பயிற்சி டாக்டர்கள், மாணவர்கள், அரசு டாக்டர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
எம்.பி.பி.எஸ் படித்து முடித்த மாணவர்கள் ‘நெஸ்ட்’ என்ற ‘எக்ஸ்சிட்’ தேர்வை எழுத வேண்டும் என்று புதிய தேர்வு முறையை மத்திய அரசு கொண்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டம் குறித்துஅரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எக்ஸ்சிட் புதிய தேர்வு முறை தேவையில்லை. எம்.பி.பி.எஸ் படிக்கும் போதே மாணவர்கள் தேவையான மருத்துவ பயிற்சியும், கல்வியும் அறிந்து இருக்கிறார்கள். அதன் பிறகு ஒரு தேர்வு முறை தேவையற்றது. அதனை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் பெரிய அளவில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X