என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூதப்பாண்டி அருகே தொழிலாளியை வெட்டி கொல்ல முயற்சி: பிரபல ரவுடி கைது
Byமாலை மலர்5 Jan 2017 1:22 PM GMT (Updated: 5 Jan 2017 1:22 PM GMT)
தொழிலாளியை வெட்டி கொல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். இவர் மீது நேசமணி நகர் போலீசில் அடிதடி வழக்கு, கத்திகுத்து உள்பட பல வழக்குகளும் உள்ளது.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே சீதப்பால் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்றோ ஜெலஸ்டின் (வயது 43). தொழிலாளி. நேற்று துவரங்காடு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ்(22) என்பவர் அங்கு வந்தார். அவர் ஆன்றோ ஜெலஸ்டினிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார்.ஆனால் ஆன்றோ ஜெலஸ்டின் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்பிரகாஷ் தான்மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆன்றோ ஜெலஸ்டினை வெட்டினார்.
இதில் சுதாரித்து கொண்ட அவர் அரிவாள் வெட்டில் இருந்து தப்பினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து ஆன்றோ ஜெலஸ்டின் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பென்சாம், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருள்பிரகாஷ் பிரபல ரவுடி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருள் பிரகாஷ் நேற்று முன் தினம் ஆரல்வாய்மொழி பகுதியில் பழனி என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது நேசமணி நகர் போலீசில் அடிதடி வழக்கு, கத்திகுத்து உள்பட பல வழக்குகளும் உள்ளது.
பூதப்பாண்டி அருகே சீதப்பால் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்றோ ஜெலஸ்டின் (வயது 43). தொழிலாளி. நேற்று துவரங்காடு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ்(22) என்பவர் அங்கு வந்தார். அவர் ஆன்றோ ஜெலஸ்டினிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார்.ஆனால் ஆன்றோ ஜெலஸ்டின் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்பிரகாஷ் தான்மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆன்றோ ஜெலஸ்டினை வெட்டினார்.
இதில் சுதாரித்து கொண்ட அவர் அரிவாள் வெட்டில் இருந்து தப்பினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து ஆன்றோ ஜெலஸ்டின் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பென்சாம், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருள்பிரகாஷ் பிரபல ரவுடி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருள் பிரகாஷ் நேற்று முன் தினம் ஆரல்வாய்மொழி பகுதியில் பழனி என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது நேசமணி நகர் போலீசில் அடிதடி வழக்கு, கத்திகுத்து உள்பட பல வழக்குகளும் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X