search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது
    X

    பெரம்பலூரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது

    பெரம்பலூரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பலூர்:

    திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள மலையப்பன் சாலையை சேர்ந்தவர் சீனிவாசன் (37). இவர் பாடாலூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மங்கூன் பகுதியில் பெண்களை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதே போல் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேஷ் (21).

    இவர் பெரம்பலூர், அரும்பாவூர், கை.களத்துவர் ஆகிய போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டு அரியலூர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. சோனல் சந்திரா, பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வரும் சீனிவாசன் மற்றும் வெங்கடேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

    Next Story
    ×