search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது
    X

    தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது

    தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சங்கு கூடத்தில் நடக்கிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சங்கு கூடத்தில் நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு சிலிண்டர் வினியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்துக் கொள்ள உள்ளார்கள். எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ, எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுக்கலாம்.

    இந்த கூட்டத்தில், பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம், எரிவாயு வினியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் வகையான குறைகளையும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×