search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அகிம்சாபுரத்தில் வி‌ஷம் குடித்து லோடுமேன் பலி
    X

    மதுரை அகிம்சாபுரத்தில் வி‌ஷம் குடித்து லோடுமேன் பலி

    மதுரை அகிம்சாபுரத்தில் உடல் நலக்குறைவால் லோடுமேன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அகிம்சா புரத்தைச் சேர்ந்தவர் பரமன் (வயது60), லோடுமேன் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக இவருக்கு கடுமையான மூட்டுவலி இருந்து வந்தது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாக வில்லை. இதனால் விரக்தி அடைந்த பரமன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரமன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×