search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
    X

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் இன்று காதலர்கள் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் வரவழைத்து சமரச பேச்சு நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே உள்ள பூவான்களத்தை சேர்ந்தவர் முருகன் மகன் வடிவேல்(வயது22). வடமதுரையில் உள்ள ஒருமில்லில் வேலை செய்து வருகிறார். அய்யலூர் அருகே எஸ்.குரும்பபட்டியை சேர்ந்த முருகன் மகள் சண்முகப்பிரியா(20). அய்யலூரில் உள்ள ஒரு ஜவுளிகடையில் வேலை பார்த்து வருகிறார்.

    வடிவேலும், சண்முகப்பிரியாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் அவர்களின் காதலுக்கு சண்முகப்பிரியாவின் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எனவே வீட்டை விட்டு வெளியேறிய காதல்ஜோடியினர் வேங்கனூரில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தினால் இன்று காலை வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் வரவழைத்து சமரச பேச்சு நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×