என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமத்திவேலூர் பகுதியில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைப்பு
Byமாலை மலர்7 Dec 2016 6:37 AM GMT (Updated: 7 Dec 2016 6:37 AM GMT)
பரமத்திவேலூர் பகுதியில் இன்று 2-வது நாளாக வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். கடைகள் அடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சற்று சிரமப்பட்டனர்.
பரமத்திவேலூர்:
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்திலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதையடுத்து இன்று காலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சோழசிராமணி, ஜேடர்பாளையம், பிளிக்கல் பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர், பரமத்தி, கந்தம்பாளையம், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் பரமத்தி வேலூரில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்றும் கடைகளை அடைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பரமத்திவேலூர் பகுதியில் மீண்டும் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். கடைகள் அடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சற்று சிரமப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X