என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
Byமாலை மலர்3 Dec 2016 9:58 AM GMT (Updated: 3 Dec 2016 9:58 AM GMT)
திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் ஊராட்சி நேமம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது38) விவசாயி. இவர் மனைவி கவிதா (33). இவருக்கு பிரியதர்ஷினி (10), மதுமிதா (7) என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனை அரியாத கவிதா கம்பி வேலியை தொட்டுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார். அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கவிதாவை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து எழிலூர் கிராம நிர்வாக அலுவலர் கோகிலன், எடையூர் வருவாய் ஆய்வாளர் ஜோதிபாசு உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X