search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிசம்பர் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்
    X

    டிசம்பர் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

    புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. 48 மணி நேரத்தில் இந்த தாழ்வுநிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும்.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையை நோக்கி நகரும் போது மழை பெய்யும்.

    இதனால் டிசம்பர் 1-ந் தேதி முதல் 4-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×