search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோட்டில் தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம்
    X

    திருச்செங்கோட்டில் தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம்

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் திருச்செங்கோட்டில் நடந்தது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் திருச்செங்கோட்டில் நடந்தது. பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகே தொடங்கி தெற்கு வடக்காக வேலூர் ஓம்காளி அம்மன் கோவிலில் தொடங்கி சங்ககிரி ரோடு மரக்கடை வரை என்று சுமார் அரை கிலோ மீட்டர்தூரம் மனித சங்கிலி நீண்டது.

    போராட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பரமத்தி சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஜே.கே.எஸ். மாணிக்கம், நகர செயலாளர்கள் நடேசன், பள்ளி பாளையம் ரவிச்சந்திரன், குமார பாளையம் வெங்கடேஷ், மல்லசமுத்திரம் பேரூர் செயலாளர் திருமலை ஒன்றிய செயலாளர்கள் திருச்செங்கோடு வட்டூர் தங்கவேல், பள்ளிபளையம் யுவராஜ், எலச்சிபாளையம் தங்கவேல், மல்லசமுத்திரம் பழனிவேல் பரமத்தி தன்ராஜ், கபிலர்மலை சண்முகம், பொதுக் குழு உறுப் பினர் சேரன் சக்திவேல், மகளிர் அணி பூங்கோதை செல்லதுரை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் இந்த மனித சங்கிலி போரட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×