என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவண்ணாமலை அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் 3 பவுன் நகை-பைக் திருட்டு
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் தென்றல் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 49). அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வேலை நிமித்தமாக சென்னைக்கு சென்றார்.
ஜெய்சங்கரின் மனைவி மற்றும் குடும்பத்தினர், திருவண்ணாமலை அருகே உள்ள தென்மாதி மங்கலத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலையில், ஜெய்சங்கரின் வீட்டு கதவு திறந்திருந்தது. பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர் போன் மூலம் ஜெய்சங்கருக்கு தகவல் கொடுத்தார். சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அவர் விரைந்து வந்தார். வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த பைக் திருடு போனதை கண்டு ஜெய்சங்கர் அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு 3 பவுன் நகையையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஜெய்சங்கர், திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்