என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோலம் போட்ட பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்து நகை பறிப்பு
Byமாலை மலர்4 Oct 2016 10:52 AM GMT (Updated: 4 Oct 2016 10:52 AM GMT)
கோலம் போட்ட பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்து நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை:
வெள்ளலூரை சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மனைவி குருவம்மாள் (வயது 62). இன்று காலை குருவம்மாள் தனது வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் குருவம்மாளிடம் முகவரி கேட்டனர். பின்னர் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கூறினர்.
உடனே வீட்டுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர குருவம்மாள் திரும்பினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 2 வாலிபர்களும் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ‘திருடன்.. திருடன்’ என்று சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்,
இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X