என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் துப்புரவு தொழிலாளர்கள் சுகாதார துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Byமாலை மலர்18 Aug 2016 8:08 AM GMT (Updated: 18 Aug 2016 8:08 AM GMT)
திருப்பூரில் இன்று காலை துப்புரவு தொழிலாளர்கள் சுகாதார துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி வார்டுகளான 34, 39, 40, 41, 42, 44, 45 ஆகிய 7 வார்டுகளில் 200-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த 7 வார்டுகளிலும் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த 1½ மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி தனியார் நிறுவனத்திடம் அவர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் மாநகராட்சியில் இருந்து பணம் வரவில்லை என்று தெரிவித்ததாக தெரிகிறது.
இதைதொடர்ந்து இன்று காலை 7 வார்டுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்- பெண் துப்புரவு தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.
பின்னர் திருப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள சுகாதார துறை அலுவலகம் முன்பு அவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக சம்பள தொகையை வழங்கக் கோரி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருப்பூர் போலீசார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி வார்டுகளான 34, 39, 40, 41, 42, 44, 45 ஆகிய 7 வார்டுகளில் 200-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த 7 வார்டுகளிலும் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த 1½ மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி தனியார் நிறுவனத்திடம் அவர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் மாநகராட்சியில் இருந்து பணம் வரவில்லை என்று தெரிவித்ததாக தெரிகிறது.
இதைதொடர்ந்து இன்று காலை 7 வார்டுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்- பெண் துப்புரவு தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.
பின்னர் திருப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள சுகாதார துறை அலுவலகம் முன்பு அவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக சம்பள தொகையை வழங்கக் கோரி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருப்பூர் போலீசார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X