என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னையில் அட்டகாசம் செய்த வழிப்பறி கொள்ளையர்கள் 8 பேர் கைது
ராயபுரம்:
கொருக்குப்பேட்டை புட்டா தெருவை சேர்ந்தவர் நவின் ஐ.டி.ஐ. மாணவர். இவர் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு கொருக்குப்பேட்டை மண்ணப்ப தெரு வழியாக இரவு வீடு திரும்பினார்.
அப்போது 2 மர்ம நபர்கள் நவீனை தாக்கி அவரிடம் இருந்து ரூ.1000-ம் பறித்தனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 2 மர்ம நபர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கொருக்குப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக், ரமேஷ் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகரை சேர்ந்த வர் முருகன் கூலி தொழிலாளி. இன்று அதிகாலையில் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க கொருக்குப்பேட்டை மேம்பாலம் வழியாக நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் முருகனை தாக்கி அவரிட மிருந்து ரூ.800யை பறித்தனர். உடனே முருகன் திருடன், திருடன் என கத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட ஆர்.கே.நகர் போலீசார் 2 மர்ம நபர்களையும் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் மண்ணடி முத்தாம்பேட்டையை சேர்ந்த கார்த்திக், வியாசர்பாடி சதீஷ் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஆர்.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
குன்றத்தூர் அருகே தரப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு கணவரு டன் மோட்டார் சைக்கிளில் சென்ற அதே பகுதியை சேர்ந்த கவிதாவை 4 பேர் கும்மல் வழிமறித்து கத்தி முனையில் 3 பவுன் நகை, செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பினர்.
இதே போல் அன்று இரவு வளசரவாக்கம் லட்சுமி நகரை சேர்ந்த இலங்கை தமிழர்களான சுரேந்தர்- லட்சுமி தம்பதியை தாக்கி 5 பவுன் செயின் பறிக்கப்பட்டது.
ஒரே நாளில் பள்ளிக்கரணை, குன்றத்ததூர், மாங்காடு, போரூர் பகுதியில் தனியாக சென்றவர்களை மிரட்டி அடுத்தடுத்து நகை - பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அய்யப்பன் தாங்கல், போரூர் பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து உள்ளனர்
இவர்களில் 2 பேர் சிறுவர்கள். ஒருவர் பிளஸ்-2 மாணவர் ஆவார். உல்லாச செலவு செய்ய வழிப்பறியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
பிடிபட்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்