search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் பள்ளி மாணவி கடத்தி திருமணம்: வாலிபர் கைது
    X

    திருவண்ணாமலையில் பள்ளி மாணவி கடத்தி திருமணம்: வாலிபர் கைது

    திருவண்ணாமலையில் 8-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் மேப்பந்துறை கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 19). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தினார்.

    இதையடுத்து, அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மாணவியை கடத்தி திருமணம் செய்த பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×