search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
    X

    சிவகிரி அருகே கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

    • சிவகிரி அருகேயுள்ள உள்ளார் மேற்கே கருவாட்டுப்பாறை அருகில் சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.
    • கைதானவர்களிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    சிவகிரி:

    சிவகிரி காவல் சரகத்திற்கு உட்பட்ட சிவகிரி, ராயகிரி பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகிரி அருகேயுள்ள உள்ளார் மேற்கே கருவாட்டுப்பாறை அருகில் சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    போலீசாரை கண்டவுடன் அவர்கள் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரித்தபோது அவர்கள் சிவகிரியை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 20) மற்றும் ராயகிரியைச் சேர்ந்த ராஜ்கண்ணன் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் 200 கிராம் அளவு கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×