search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி பகுதியில் கடைகளில் மது, புகையிலை விற்ற 2 பேர் கைது
    X

    ஆறுமுகநேரி பகுதியில் கடைகளில் மது, புகையிலை விற்ற 2 பேர் கைது

    • ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தில் கடை நடத்தி வரும் கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் பாண்டியன் என்பவர் அங்கு அரசு முத்திரையுடன் கூடிய மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று வந்தார்
    • அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 250 மற்றும் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பகுதியில் உள்ள கடைகளில் மது மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் பிரபாக்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிரடி ஆய்வை மேற்கொண்டனர்.

    அப்போது ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தில் கடை நடத்தி வரும் கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் பாண்டியன் (வயது 29) என்பவர் அங்கு அரசு முத்திரையுடன் கூடிய மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

    இதனால் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 250 மற்றும் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் காயல்பட்டினம் பூந்தோட்டத்தில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக ஜெயராமன் (39) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×