search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே மாணவர் உள்பட 2 பேர் மாயம்
    X

    கோப்பு படம்

    தேனி அருகே மாணவர் உள்பட 2 பேர் மாயம்

    • தேனி அருகே மாணவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை கள்ளிப்பட்டி பேயன்அம்பலம் தெருவை சேர்ந்த முருகன் மகன் சூரியபிரசாத் (வயது19). இவர் திருச்சியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். சொந்த ஊரில் நடந்த திருவிழாவை காண்பதற்காக சூரியபிரசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். மீண்டும் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார்.

    இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி வடமால் தெரு வ.உ.சி. நகரை சேர்ந்த நீதிராஜன் மகள் சென்பாஸ்ரீ (17). இவர் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில்இருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் அங்காளஈஸ்வரி தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×