search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே இடப்பிரச்சினையால் 2 குடும்பத்தினர் மோதல்-  பெண்கள் உள்பட 8 பேர் காயம்
    X

    களக்காடு அருகே இடப்பிரச்சினையால் 2 குடும்பத்தினர் மோதல்- பெண்கள் உள்பட 8 பேர் காயம்

    • 2 தரப்பினர் மோதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • இரு தரப்பினரும் தனித்தனியாக திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள தெற்கு மாவடி வேளார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகநம்பி (63). இவர் மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெயபால் (72). இவர்கள் இருவருக்குமிடையே இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று ஆறுமுகநம்பி தனது வீட்டு கட்டிட பணிகளுக்காக லாரி மூலம் குண்டுக்கல் அடித்து வைத்திருந்தார்.

    இது பாதையில் அடித்து வைத்திருப்பதாக ஜெயபால் கூறியதாக தெரிகிறது. இதுசம்பந்தமாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த ஜெயபால் குடும்பத்தினர், ஆறுமுகநம்பி குடும்பத்தினரை சரமாரியாக கற்களால் தாக்கினர். இதில் ஆறுமுகநம்பி, அவரது மகன்கள் தங்கராஜ், முத்துசெல்வராஜ், தங்கராஜ் மனைவி சுகுமாரி, தங்கராஜ் மகன் நளின் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

    இதுபோல ஆறுமுகநம்பி குடும்பத்தினர் தாக்கியதில் ஜெயபால், அவரது மனைவி பாலசுந்தரி, முரளி மனைவி ஆனந்த ஏஞ்சல் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர்.

    இவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் ஜெயபால், அவரது மனைவி பாலசுந்தரி, அவரது மகன்கள் ஜெகன், கோபி, முரளி, ஜெகன் மனைவி பிரபா, முரளி மனைவி ஆனந்த ஏஞ்சல், ரத்தினராஜ் மகன் பென்னட், ஆறுமுகநம்பி, அவரது மனைவி அம்பிகாவதி, மகன்கள் தங்கராஜ், முத்துசெல்வராஜ், தங்கராஜ் மனைவி சுதாகுமாரி, தங்கராஜ் மகன் நபின், மகள் நிரேஞ்சனா, முத்துசெல்வராஜ் மனைவி ஆகிய 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×