என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் பெண் ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது
- அனுபிரியா மெட்டல் கடையில் வேலை பார்த்து வந்தார்.
- அனுபிரியா வேலைபார்த்த இடத்தில் மனஉளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்துள்ளார்.
கோவை,
கோவை காட்டூர் காளப்பன் லே-அவுட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அனுபிரியா (வயது 25). இவர் செல்லப்பன் வீதியில் உள்ள ஒரு மெட்டல் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அனுபிரியா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதையொட்டி அனுபிரியாவின் உறவினர்கள் ஏராளமானோர் பிரேத பரிசோதனை மையம் முன்பு திரண்டு நின்றனர். அனுபிரியா வேலைபார்த்த இடத்தில் மனஉளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். எனவே அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். விசாரணை நடத்தி தவறு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதை ஏற்று உறவினர்கள் அனுபிரியாவின் உடலை பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போலீசார் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கடையில் வேலை பார்க்கும் திலகவதி, நாகராஜ் ஆகியோருக்கும், அனுபிரியாவுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இது குறித்து அனுபிரியா காட்டூர் போலீசாருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரி வித்தார். போலீசார் மெட்டல் கடைக்கு விரைந்து சென்று அனுபிரியாவிடம் தகராறு செய்த திலகவதி, நாகராஜ் ஆகியோரை எச்சரித்து விட்டு சென்றனர்.
இது குறித்து இவர்கள் 2 பேரும் மெட்டல் கடை உரிமையாளர் சிவக்குமாரிடம் தெரி வித்தனர். உடனடியாக உரிமையாளர் அனுபிரியாவை தனது அலுவலகத்துக்கு அழைத்து போலீசில் ஏன் புகார் செய்தாய் என கண்டித்ததுடன், சம்பளத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போ, இனி உனக்கு இங்கு வேலை இல்லை என கூறி அனுப்பி வைத்துள்ளார்.
இதன் காரணமாக மனவேதனை அடைந்த அனுபிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து அனுபிரியாவை தற்கொலைக்கு துண்டியதாக வழக்குப்பதிவு செய்து மெட்டல் கடை உரிமையாளர் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த சிவக்குமார் (36), ஊழியர் நாகராஜ் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அனுபிரியாவுடன் தகராறு செய்த திலகவதி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்