search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி வாரச்சந்தையில் காய்கறி கடைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள்
    X

    வாரச்சந்தை கடையில் தீப்பற்றி எரிந்த காட்சி.


    ஆண்டிபட்டி வாரச்சந்தையில் காய்கறி கடைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள்

    • ஆண்டிபட்டி வாரச்சந்தை முன்பு தினசரி காய்கறி கடைகளும் உள்ளன.
    • நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்ததால் 10 கடைகள் எரிந்து நாசமாகின.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம், ஆண்டிட்டி பஜார் வீதியில் காய்கறி வாரசந்தை செயல்பட்டு வருகிறது. வாரசந்தை நுழைவாயில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் 12 மணியளவில் இந்த பகுதியில் வந்த மர்மநபர்கள் காய்கறி கடைகளுக்கு தீவைத்து விட்டு சென்றனர்.

    இதனால் தீ மளமளவென பற்றி எரிந்து மற்ற கடைகளுக்கும் பரவியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் 10 காய்கறிகடைகளும் அடியோடு எரிந்து நாசமானது. நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×