search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களித்தார் கனிமொழி
    X
    வாக்களித்தார் கனிமொழி

    முழு கவச உடை அணிந்து வந்து வாக்களித்தார் கனிமொழி

    திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கடந்த 3ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.

    காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள், வாக்குச்சாவடிக்கு வரும்போது உடல் வெப்பத்தில் மாறுபாடு ஏற்பட்டு தொற்றுக்கான சந்தேகம் உள்ளவர்கள் ஆகியோருக்கு கடைசி ஒரு மணி நேரத்தில் முழு கவச உடையுடன் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கடந்த 3ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் முழு கவச உடையணிந்து வந்து கனிமொழி தனது வாக்கை பதிவு செய்து ஜனநாய கடமையாற்றினார்.

    இதேபோல் அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் முழு கவச உடை அணிந்து வந்து வாக்களித்தார்.
    Next Story
    ×